வீடியோ!! நாயை காரில் கட்டி இழுத்து சென்ற மருத்துவரின் இழிசெயல்!!

 
நாய்

தற்போதைய வாழ்க்கை முறையில் சமூக  அந்தஸ்தை பெறுவதற்காக நாய் வளர்ப்பது பேஷனாகி வருகிறது. இத்தகையவர்கள் நாயை வளர்ப்பதை ஒரு சோஷியல் ஸ்டேட்டசாகவே பார்த்து வருகின்றனர். அவைகளின் மேல் உண்மையான அக்கறையுடனும், கரிசனத்துடனும் இருப்பதோ அவைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதோ கிடையாது. அத்தகைய ஒரு விபரீத சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவர் தனது காரில் நாயை கட்டி சாலை வழியே இழுத்து சென்றுள்ளார். அந்த நாய், காரின் பின்னாலேயே ஓடியுள்ளது. இதனை இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அந்த காரை வழிமறித்து, நிறுத்தி நாயை அவிழ்த்து விட்டுள்ளனர். 


இதனைத் தொடர்ந்து காயத்துடன் இருந்த நாயை ஆம்புலன்ஸ் ஒன்றில் சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர். மேலும் ரஜ்னீஷ் கால்வா என்பவர் காவல்துறையை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். இதையடுத்து டாக் ஹோம் அறக்கட்டளை கொடுத்த புகாரின் பேரில் நாயை காரில் கட்டி இழுத்துச்சென்ற மருத்துவர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

நாய்

இது குறித்து மருத்துவர் கூறுகையில், தனது வீட்டின் அருகே தெரு நாய் வசித்து வந்ததாகவும், அதனை அப்புறப்படுத்த முயற்சியில் தான் அவ்வாறு ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார். பல வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நீண்ட கயிறு இருப்பதால், நாய் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வாகனத்தின் இறுபுறமும் அங்கும் இங்கும் ஓடியது காண்போரை கண் கலங்க செய்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web