வைரல் வீடியோ!! பிகினி இளம்பெண்களுக்கு மத்தியில் கலாச்சார உடையில் இளம் பெண்!!

 
பிகினி

இந்தியர்கள் பொதுவாக எங்கே சென்றாலும்  அங்கு  உள்ள கலாச்சாரம் , உணவு , பழக்க வழக்கங்களை ரசித்து இங்கே செயல்படுத்தியும் பார்ப்பர். நமது பாரம்பரியம் , நடைமுறைகள் இவைகளை மதிக்கவும் செய்வோம். அந்த வகையில் மேலை நாடுகளில் பெண்கள் நீச்சல் உடைகளில் கடற்கரையில் குவிவது வழக்கம். அவர்களுக்கு இடையில்  வட இந்தியாவில்  ராஜஸ்தான் மாநிலங்களில் பெண்கள் அணியும் பாரம்பரிய உடையில் பெண் ஒருவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.



கடற்கரையில் பிகினி அணிந்த பல சுற்றுலாப் பயணிகளிடையே சேலையில் அந்தப் பெண் மட்டும் தனித்து தெரிகிறார். அந்த பெண் நீலம், சிகப்பு , பச்சை என்னும் முதன்மை நிறங்களில் பாந்தினி ஆடையில் அப்பெண் அணிந்திருக்கிறார். அந்த வகை ஆடை வட இந்தியாவின் பாரம்பரியங்களில் ஒன்று. தலையில் முக்காடு போட்டுக்கொண்டு அந்த பெண் நடந்து வருவதையும் வெளிநாட்டு பெண்கள் பார்க்கின்றன. இந்த வீடியோ இதுவரை 99000க்கும்  மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு பலவிதமான கமெண்ட்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

மற்றொரு வீடியோவும் வைரலாகி வருகிறது . அந்த வீடியோவில் ஸொமாட்டோ டெலிவரி பாயிடம் ஒரு பெண் கடுமையாக பேசுகிறார். அடுத்த சில வினாடிகளில் காலில் போட்டிருந்த ஷூவை எடுத்து அந்த டெலிவரி ஊழியரை அடிக்கிறார். மீண்டும் காலில் ஷூவை போட்டுக்கொண்டு , தோழியுடன் கிளம்பி செல்கிறார். ஊழியர் எதுவும் பேசாமல், பயந்தவராக கைகளை கட்டிக்கொண்டு நின்றுக்கொண்டிருக்கிறார்.  இந்த சம்பவம் எங்கு நடந்தது என தெளியவாக தெரியவில்லை என்றாலும் கூட பெங்களூருவாக இருக்கலாம் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். 

செருப்பு
ஸொமாட்டோ டெலிவரி பையன் மற்றொரு இடத்தில் கொடுக்க வேண்டிய உணவை அந்த பெண்ணிற்கு கொடுத்ததுடன் அதற்கான பில்லுக்கு பணம் கேட்டிருக்கிறார். அதனால் அந்த பெண் காலணிகளை கழற்றி அடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வீடியோ வெளியான பிறகு அந்த ஊழியர், பதிவிட்டவரின் அறைக்கு சென்று கதறி அழுது  தன் வேலை போய்விடும் என கதறி அழுதிருக்கிறார். இதனால் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web