வைரல் வீடியோ!! காரை இப்படி கூட உபயோகிக்கலாமா?! குவியும் பாராட்டுக்கள்!!
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான மகேந்திரா குழுமத்தின் சேர்மேனாக இருப்பவர் ஆனந்த் மகேந்திரா. தொழிலில் எந்தளவிற்கு ஈடுபாட்டுடன் இருக்கிறாரோ, அதே அளவு சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருப்பவர்.தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி இளைஞர்கள் மேற்கொள்ளும் புது புது முயற்சிகளை பாராட்டி ஊக்கப்படுத்துவதுண்டு. குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.
This person is:
— anand mahindra (@anandmahindra) August 19, 2022
1) A passionate car lover?
2) An introvert who doesn’t want anyone to try and enter his home?
3) Someone innovative with a quirky sense of humour?
4) All of the above? pic.twitter.com/CZxhGR7VDb
அந்த வகையில், தற்போது ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தொடர்பான செய்தி, அவர் உட்பட நெட்டிசன்கள் பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்த கேட் காரின் இரு பகுதியைக் கொண்டு இரும்பு கேட் உடன் இணைக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் உள்ளே செல்லவும், வீட்டிலிருந்து வெளியே செல்லவும் காரின் கதவைத் திறந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆனந்த் மகேந்திரா ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, அந்த முயற்சியைச் செய்த நபரை பாராட்டியுள்ளார். “இந்த நபர் ஒரு தீவிர கார் பிரியரா?. யாரும் தனது வீட்டிற்குள் நுழைய விரும்பாத சிந்தனையாளரா?, நகைச்சுவை உணர்வுடன் கூடிய புதுமையான நபரா, இல்லை மேலே உள்ள அனைத்துமா என்று நான்கு ஆப்ஷன்களை ஆனந்த் மகேந்திரா கொடுத்துள்ளார்.
இந்த நான்கு ஆப்ஷன்களில் நீங்கள் எதனை தேர்ந்தெடுப்பீர்கள் என்பது போல் ஆனந்த் மகேந்திராவின் ட்விட் அமைந்துள்ளது. மேலும் ஆனந்த் மகேந்திராவின் இந்த ட்விட்டிற்கு பலரும் கார் வடிவிலான கேட் குறித்து தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?