வீடியோ! 184 பேருடன் பெங்களூரு புறப்பட்ட விமானம்! இறக்கையில் பற்றி எரிந்த தீ! சமயோசிதமாய் செயல்பட்ட விமானி!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் விமான நிலையம் இந்திராகாந்தி விமான நிலையம். நேற்று இரவு இங்கிருந்து பெங்களூருக்கு புறப்படுவதற்கு 6E-2131 என்ற இண்டிகோ விமானம் ஓடுதளத்தில் இருந்து டேக் ஆப் செய்ய தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தின் வலது இறக்கையில் இருந்து தீப்பொறி கிளம்பியது. உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது.
அத்துடன் விமானத்தில் இருந்தபயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டனர். விமான நிலையத்தில் தயாராக இருந்த தீயணைப்பு வாகனம் வந்து தீயை முற்றிலும் அணைத்தது. அதிர்ஷ்டவசமாக இந்த தீவிபத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விமானத்தில் இருந்த 177 பயணிகளும், 7 பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் விமானநிலையமே பரபரப்பு அடைந்தது. விமானத்தின் இறக்கையில் தீப்பிடித்ததை விமானத்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், விமானத்தின் எஞ்சினுக்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறுகின்றன.
IndiGo flight 6E-2131 Delhi to Bangalore while take off at the Delhi airport tonight. BTW I’m also about to fly IndiGo tonight. 🫣 pic.twitter.com/6RyOBc0gTW
— Sudhir Chaudhary (@sudhirchaudhary) October 28, 2022
விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. இது குறித்து விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சம்பவம் நடந்த உடன் இண்டிகோ நிர்வாகம் செய்திக்கு றிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் விமானம் 6E2131 புறப்படும்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என அறிவித்தது. அதே போல் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்ட மாற்று விமானத்தின் மூலம் பயணிகள் பெங்களூரு சென்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!