வைரல் வீடியோ!! புதைகுழிக்குள் சிக்கிய சிறுவனை சாதுர்யமாக மீட்ட இளைஞர்கள்!!

 
புதைகுழி

கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கங்களும், மின் சக்தி ஆலைகளும் அமைந்துள்ளன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தனது சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட மணலை சுரங்கத்தின் அருகிலேயே மலைபோல குவித்து வைத்திருக்கிறது. இரண்டாம் சுரங்கத்தின் அருகில் ஊமங்கலம் உட்பட பல கிராமங்கள் உள்ளன. 

புதைகுழி

இந்நிலையில் ஊமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவன் நேற்று அந்த மணல் மீது நடந்து சென்று கொண்டிருந்த போது மண்ணில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால் அந்த மணல் உள் வாங்கியது. அதனால் அந்த சிறுவன் மார்பளவுக்கு உடல் மண்ணில் புதைந்தது. இதனால் பயத்தில் சிறுவன் அலறி நடுங்கினான்.

அப்பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை என்பதால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் சிறுவன் தனியாளாக கத்திக் கதறிக் கொண்டிருந்தான். சிறுவன் கூச்சலிட்டு சோர்வடைந்து போனான். அந்த நேரத்தில் தான் அவனுக்கு எதிர்பாராத உதவி கிடைத்தது. சிறுவன் இருந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நெய்வேலி ரோமாபுரியை சார்ந்த இளைஞர்கள் 4 பேர் புதை குழிக்குள் சிக்கிய சிறுவனை கண்டனர். உடனடியாக அவனை மீட்க அந்த பகுதியை நோக்கி சென்ற அவர்களின் கால்களும் மணலில் புதைய ஆரம்பித்தன. அதனால் செய்வதறியாது திகைத்தனர்.

சிறிது நேரம் யோசனைக்கு பின் அவர்களுக்கு புதிய உத்தி உதயமானது. அவர்களில் ஒருவர் மணலில் படுத்தபடி மெல்ல மெல்ல உருண்டு சென்று சிறுவனை அடைந்தார். படுத்த நிலையிலேயே சிறுவனை கையை கொடுத்து கொஞ்சம் கொஞ்ச கொஞ்சமாக மேலே இழுத்தார். இதற்கிடையே மற்றொரு இளைஞரும் மெல்ல மெல்ல உருண்டு சென்று சிறுவனை மீட்ட இளைஞருக்கு கை கொடுத்தார். அதன் விளைவாக சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

சிறுவனுக்கு முதல் உதவி செய்து வீட்டிற்கு கொண்டு சென்று விவரத்தை சொல்லி ஒப்படைத்தனர். இத்தகைய பெருஞ்செயலை செய்த ரோமாபுரி இளைஞர்கள் பிரவின் குமார், எட்வின் ராஜ், மிரோலின், ராகுல் ஆகியோரை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வைரல் வீடியோ!! வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வைரல் வீடியோ!! இனி கார் சாவிய தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web