வைரல் வீடியோ!! குடுமிப்பிடி சண்டையில் பத்ரகாளிகளாக மாறிய பெண்கள்!!
இந்தியாவில் நெடுஞ்சாலைகளை கடக்கும் வழித்தடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கால விரயம் பெருமளவு குறைந்துள்ளது. அத்துடன் விரைவான பாதுகாப்பான பயணங்களும் சாத்தியமாகி வருகின்றன.
அந்த வகையில் மகாராஷ்டிராவில் நாசிக் பகுதியில் டோல் பிளாசா ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்போது அங்கு வந்த காரில் இருந்த பெண்ணுக்கும் சுங்கச்சாவடியில் இருந்த பெண் ஊழியருக்கம் இடையே கட்டணம் செலுத்துவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் காரில் வந்த பெண், பத்திரகாளியாக மாறி சுங்கச்சாவடி பெண் ஊழியரின் தலைமுடியை பிடித்து தாக்கியுள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் சுங்கச்சாவடியில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 2 நிமிடம் 47 வினாடிகள் கொண்ட வீடியோவில், காரில் வந்த பெண் சுங்கச்சாவடி பணியாளரின் சட்டையை சிஆர்பிஎஃப் கணவர் மற்றும் பிற பார்வையாளர்கள் பார்க்கும்போது அந்தப் பெண்மணியைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
A shocking incident has come to light that a fierce fight took place between women at the Pimpalgaon toll booth near Nashik. @IGPNashikRange pic.twitter.com/1PwGTugSqo
— 𝕄𝕣.ℝ𝕒𝕛 𝕄𝕒𝕛𝕚 (@Rajmajiofficial) September 15, 2022
மேலும், இரண்டு பெண்களும் ஒருவரையொருவர் தலைமுடியை இழுத்துக் கொண்டு தாக்கி கொள்வதை அந்த வீடியோவில் காணலாம். பெண் சுங்கச்சாவடி ஊழியரிடம் அந்த பெண்ணின் கணவர் தகராறு செய்வதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து நாசிக் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!