விஷால் பட நடிகையை கரம் பிடித்த பிரபல பாடகர்!! குவியும் பாராட்டுக்கள்!!
கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் வெகு சில திரைப்படங்களில் நடித்தவர் ஆகன்ஷா பூரி. இவர் தமிழில் கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், விஷாலின் ஆக்ஷன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக தமிழில் ஒளிபரப்பான விநாயகர் பக்தி தொடரில் பார்வதி தேவியாக நடித்து அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடித்தார். இந்தியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமடைந்தார்.
இந்நிலையில் நடிகை ஆகன்ஷா பூரி, பிரபல இந்தி பாடகர் மிகா சிங் நடத்திய மணமகளை தேர்வு செய்யும் சுயம்வர நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நடந்தது. மிகா சிங் இந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் அதிக பாடல்களை பாடி இருக்கிறார். மகாசிங் நடத்திய சுயம்வரம் நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்களில் ஒருவராக நடிகை ஆகன்ஷா பூரி கலந்து கொண்டார். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற போட்டியின் இறுதியில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஒருவராக இருந்த நடிகை ஆகன்ஷா பூரிக்கு, பாடகர் மிகாசிங் மாலை அணிவித்து மனைவியாக ஏற்றுக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து மலர் மாலையுடன் ஆகன்ஷா பூரியின் பெற்றோரிடமும் மிகாசிங் ஆசி பெற்றார். சுயம்வரம் குறித்து ஆகன்ஷா பூரி தெரிவிக்கும் போது, ‘‘மிகா சிங் எப்போதும் எனது வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறார்’’ என்று தெரிவித்தார். ஏற்கனவே ஆகன்ஷா பூரியும், மிகாசிங்கும் ஏற்கனவே காதலிப்பதாக கிசுகிசுக்கள் நிலவி வந்த நிலையில், ‘‘எங்களுக்குள் காதல் இல்லை என்றும் நண்பர்களாகவே பழகுகிறோம் என்றும்’’ விளக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாலிவுட் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?