இது என்ன கல்யாண மாப்பிள்ளைக்கு வந்த சோதனை… திருமண கோலத்துடன் லேப்டாப்பில் வேலை செய்யும் புது மாப்பிள்ளை..!!!

 
புதுமாப்பிள்ளை

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு ஐ.டி.நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீடுகளில் இருந்தே வேலை செய்ய வலியுறுத்தியது. இதனால் மக்கள் பலரும் தங்களின் வீடுகளில் இருந்தே வேலை செய்ய ஆரம்பித்தனர். தொற்றின் தீவிரம் குறைந்த பின்னும் பல அலுவலகங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி தங்கள் ஊழியர்களை அறிவுறுத்தின. இப்படி வீடுகளில் வேலை செய்யும் நபர்கள் எப்போதும் லேப்டாப்பும் கையுமாகவே சுற்றித் திரிய ஆரம்பித்தனர்.

வேலை

இதற்கெல்லாம்  ஒருபடி மேலே போய், தனது திருமணத்தின் போதே ஒருவர் லேப்டாப்பில் வேலை பார்த்த வியப்பூட்டும் சம்பவம் கொல்கத்தாவில்  நிகழ்ந்துள்ளது. கொல்கத்தாவில்  மணமகன் ஒருவர், தனது திருமணத்தின்போது, இரு பூசாரிகள் மந்திரம் ஓதிக் கொண்டிருக்க, வேட்டி, பனியன் அணிந்து கொண்டு மடியில் லேப்டாப்பை வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்.

வேலை

திருமண சடங்குகள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் இவர் வேலை செய்து கொண்டிருக்கும் இந்தப் புகைப்படத்தை `கல்கத்தா இன்ஸ்டாகிராமர்ஸ்' என்ற பக்கம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் வைரலாகிய நிலையில் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் பாஸ் என்று நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.  

From around the web