இயக்குநர் லோகேஷ் கனகராஜிக்கு என்னாச்சு? குழப்பத்தில் ரசிகர்கள்!

 
கமல் லோகேஷ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு என்னாச்சு என்று ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கிய இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்காலிகமாக அனைத்து விதமான சோஷியல் மீடியாவில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் திரையுலகில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் தற்போது மிகவும் முந்திச் செல்பவர் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படம் அவரை யார் என்று மக்கள் தேடிப் பார்க்கும் அளவுக்கு பாராட்டின் உச்சாணிக் கொம்பில் அமர வைத்தது.


அதைத்தொடர்ந்து மாஸ்டர் படம் மூலமாக விஜயுடன் கைகோர்த்து முன்னணி இயக்குனராக விஸ்வரூபம் எடுத்தார்.  சமீபத்தில் வெளியான படங்களின் சாதனைகளை முறியடிக்கும் வகையில் கமல்ஹாசன் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ படத்தை இயக்கிய வகையில் லோகேஷ் கனகராஜ் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

lok

அதில்,’’நண்பர்களே, நான் அனைத்து சமூக ஊடக தளங்களில் இருந்தும் சிறிய இடைவெளி எடுக்கிறேன். எனது அடுத்த படத்தின் அறிவிப்புடன் விரைவில் உங்களை சந்திப்பேன் அதுவரை உங்கள் அனைவரையும் கவனித்துக் கொள்ளுங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார். எனவே அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரம் காட்டுவதால் தான் சமூக வலைதளங்களில் கவனம் காட்ட முடியாமல் போயுள்ளது என்று ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர். எனவே விரைவில் லோகேஷ் கனகராஜ் இன்ப அதிர்ச்சி தரும் செய்தியை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web