உலகம் முழுவதும் வாட்ஸ் - அப் சேவை முடங்கியது! பயனாளர்கள் அவதி!
உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வாட்ஸ் ஆப் சேவை கடந்த 30 நிமிடங்களாக முடங்கியுள்ளதால் உலகம் முழுவதும் பயனாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வாட்ஸ் -ஆப் செயலியில் தகவல்களை அனுப்புவதிலும் பெறுவதிலும் சிக்கல் நிலவுகிறது. இணையத்துடன் வாட்ஸ் ஆப் செயலியை இணைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொழிநுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப் சேவை முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் சார்ப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!