மனைவி கொலை வழக்கு.. சாட்சியை துபாய்க்கு அனுப்பிவைத்து போக்குகாட்டிய கணவன் !!

 
s

மனைவியை கொலை செய்த வழக்கில் 9 மாதமாக சாட்சியை நீதிமன்றத்துக்கு வரவிடாமல் கணவர் துபாய்க்கு அனுப்பி வைத்த பரபரப்பு தகவல் தெரிய வந்தது.

சென்னை கோயம்பேடு பகுதியில் அலோன் (52)- லட்சுமி (46) தம்பதி வசித்து வந்தனர். அலோன் தனது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார். மேலும் அவரை அடித்து துண்புரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தம்பதிக்குள் பயங்கர தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அலோன், மனைவி லட்சுமியின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்தார்.

murder

இந்த சம்பவத்தில் அலோனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்திபோது லட்சுமியை கொலை செய்ததை நேரில் பார்த்த லட்சுமியின் தம்பியின் மனைவி செல்வி (40) என்பது தெரியவந்தது. பின்னர் விசாரணை செய்ய போலீசார் செல்வி வீட்டிற்கு சென்ற போது செல்வி அங்கு இல்லை. வீடு பூட்டி கிடந்ததால் செல்வி எங்கு சென்றார் என்று போலீசார் விசாரணை செய்தனர். எனினும் அவர் எங்கு இருக்கிறார்?, எங்கு சென்றார் என எதுவும் போலீசாருக்கு தெரியவில்லை.

இந்த நிலையில் லட்சுமி கொலை வழக்கில், தன்னை காட்டிக்கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க அலோன், செல்வியை துபாய்க்கு அனுப்பிவைத்தது தெரியவந்தது.

murder

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மகிளா நீதிமன்றத்தில் வந்தபோது கொலை வழக்கு தொடர்பாக சாட்சி செல்வி வராததால் வழக்கு தள்ளிப்போனது. மேலும் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக அடுத்த மாதம் 2ஆம் தேதி அன்று இறுதி தீர்ப்பு வர இருப்பதால் கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் சந்திரசேகரின் கடும் முயற்சியால் சாட்சியை துபாயில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வருகிற 29ஆம் தேதி வருவதற்கு டிக்கெட் புக் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் மனைவியை கொலை வழக்கில் அலோனுக்கு தண்டனை கிடைப்பது உறுதியாகியுள்ளது.

From around the web