அவலம்!! நட்ட நடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு அங்கேயே உறங்கிய எஞ்சினியர் பட்டதாரி!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் சாலையில் மாவட்ட ஆட்சியர் இல்லம் உள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் இல்லத்தின் முன்பு உள்ள கச்சிராயபளையம் சாலையின் நடுரோட்டில் வாலிபர் ஒருவர் தனது பைக்கை நிறுத்தி விட்டு நடுரோட்டில் படுத்து சாவகாசமாக உறங்கிக் கொண்டிருந்தார்.
அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டும் காணாமல் பார்த்துச் சென்ற நிலையில், அவ்வழியாக வந்த ஒருவர் பைக்கை நிறுத்திவிட்டு போதை ஆசாமியைப் பார்த்து அதட்டி எழுப்பினார். இதனால் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தை தள்ள முடியாமல் தள்ளாடிய வாலிபர் சாலையின் ஓரம் சென்று மறுபடியும் படுத்துக் கொண்டார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் யார் என கேட்டபோது, போதையில் தனது அண்ணன் போலீஸ் என்றும், தனது பெயர் சிவா, தான் மெக்கானிக்கல் இன்ஜினியர் என போதையில் உளறியுள்ளார். இன்ஜினியர் இப்படி செய்யலாமா என கேட்டதற்க்கு இன்ஜினியரிங் படித்தால் இதான் நிலைமை என பேசிக்கொண்டே இருந்துள்ளார்.போதை இளைஞர் நடுரோட்டில் படுத்து உறங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!