மின்சாரம் தாக்கி பெண் பலி!! பீரோவுக்கு மின் இணைப்பு கொடுத்ததால் விபரீதம்!!

 
அன்பழகி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஈசானியத் தெருவில் வசித்து வருபவர் அன்பழகி (68). இவர் சீர்காழி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் உயிரிழந்த நிலையில் பிள்ளைகள் யாரும் இல்லாததால் தனியாக வசித்து வந்தார். 

மயிலாடுதுறை

இந்நிலையில் தான் சேமித்து வைத்திருக்கும் பணம் நகை உள்ளிட்டவற்றை ஒரு பீரோ வாங்கி அதில் பாதுகாப்பாக வைத்திருந்தார். மேலும் திருடர்கள் யாரும் வந்து திருடிச் செல்லாமல் இருப்பதற்காக அந்த பீரோவுக்கு மின்சார இணைப்பு கொடுத்து வைத்திருக்கிறார். தான் வீட்டில் இல்லாதபோதும், இரவிலும் அதற்கு மின் இணைப்பு கொடுத்து வைத்து விடுவார். 

வீட்டிற்கு வந்ததும், அல்லது விடிந்ததும் மறக்காமல் மின் இணைப்பை துண்டித்து விடுவார். இந்நிலையில் இன்று காலை எழுந்த அன்பழகி மின் இணைப்பை நிறுத்த மறந்துவிட்டார். வீட்டு வாசலில் கோலமிட்டு வந்தவர், பின்னர் பீரோவுக்கு அடியில் கோலமாவை வைத்த போது அவரை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மின்சாரம்

இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சீர்காழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த சீர்காழி போலீசார் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடனுக்கு பயந்து மின்சாரம் வைத்த மூதாட்டி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சீர்காழியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web