துப்பாக்கியுடன் மேடையில் குத்தாட்டம்போடும் பெண்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

 
துப்பாக்கியுடன் நடனமாடும்  பெண்

உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் போது துப்பாக்கிச்சூடு நடத்துவது இன்றும் நடந்து வருகிறது.  அது சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு எதிரானது என்றாலும் அங்குள்ள மக்கள் அதை பொருட்படுத்துவதில்லை. இதனால் சில நேரங்களில் அசம்பாவிதங்களும் அரங்கேறி வருகின்றது. இந்நிலையில்  பீகாரில் சிவான் நகரில் கையில் துப்பாக்கியுடன் பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.

அறைகுறை ஆடை  அணிந்த பெண் ஒருவர்  ஆடல் பாடல் நிகழ்ச்சியில் மேடையில் துப்பாக்கியுடன் நடனமாடுகிறார். அப்போது மேடையில் ஏறி அந்த பெண்ணுடன் நடனமாட இளைஞர்கள் சிலர் முயற்சிக்கின்றனர்.  அவர்களை அப்பெண் துப்பாக்கியைக் காட்டி  மிரட்டி  அங்கிருந்து   நகரச் சொல்கிறார். பின்னர் தொடர்ந்து நடனமாடுகிறார். அவர் மேடையில் ஆடிய முழுமைக்கும் தனது  கையில் துப்பாக்கியுடனேயே ஆடுகிறார். இருப்பினும் அவரது கையில் உள்ள துப்பாக்கியை சற்றும் மதிக்காமல் அங்குள்ள இளைஞர்கள் அப்பெண்ணுடன் மேடையில் நடனம் ஆடுவதிலே குறியாக இருந்தனர்.


  இந்நிலையில் கொண்டாட்டத்திற்கு வந்திருந்த விருந்தாளி யாரேனும் அப்பெண்ணிற்லு துப்பாக்கியைக் கொடுத்தாரா? அல்லது அந்த பெண் தனது தற்காப்பிற்காக துப்பாக்கி வைத்திருந்தாரா என விசாரணை நடைபெற்று வருகின்றது.  பொதுக்கூட்டங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், திருமணம் அல்லது பிற நிகழ்ச்சிகளில் உரிமம் பெற்ற துப்பாக்கியைக் கொண்டு கொண்டாடும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்துவது என்பது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். அப்படி கையும் களவுமாக பிடிபட்டால் அந்த நபருக்கு அபராதத்துடன் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்.

From around the web