உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி!! இந்திய வீராங்கனை சாதனை!!
உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கொலம்பியாவில் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு கலந்துக் கொண்டார்.
மொத்தம் 200 கிலோ எடையைத் தூக்கி மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை வீழ்த்தி மீரா பாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்த பிரிவில் மற்றொரு சீன வீரரான ஜியாங் ஹுய்ஹுவா, 206 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
What a save @mirabai_chanu 87 kg snatch video credits: @one_kilo_ @1k pic.twitter.com/CrtVAV0LOQ
— sathish sivalingam weightlifter (@imsathisholy) December 7, 2022
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு பெற்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு 2017-ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 194 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார் . உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு பெற்ற இரண்டாவது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.