‘அப்பா, அம்மா மன்னிச்சுடுங்க’ கடிதம் எழுதி வைத்து.. ப்ளஸ் 2 மாணவிகள் மாயம்!

 
ஞானதர்ஷினி

‘அம்மா... அப்பா.. என்னை மன்னிச்சுடுங்க. தேடாதீங்க’ என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, ப்ளஸ் 2 படிக்கும் மாணவி, தனது நெருங்கிய தோழியுடன் காணாமல் போயிருப்பது  திண்டுக்கல் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்து உள்ள பட்டிவீரன்பட்டி அருகே உள்ள காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் செல்வ ஹர்ஷனா(17). பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாமகோட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகள் ஞானதர்ஷினி (17) ஆகிய இருவரும் தோழிகளாக பழகி வந்தனர். இவர்கள் இருவரும் பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

Missing

இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்து டியூசனுக்குச் செல்வதாக கூறி விட்டு சென்ற இருவரும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என ட்யூஷன் வகுப்பில் விசாரித்த போது, மாணவிகள் டீயூசனுக்கும் போகவில்லை என்பது தெரிய வந்தது. இருவரும் தீபாவளிக்கு வாங்கிய புத்தாடையை மட்டும் பேக்கில் வைத்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

இதில் மாணவி செல்வ ஹர்ஷனா, தனது வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். என்னைத் தேட வேண்டாம் என எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து செல்வ ஹர்ஷனாவின் தாயார் முத்துலட்சுமி, பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

Pativeeranpati

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன மாணவிகளை தேடி வருகின்றனர். இது குறித்து நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து மாணவிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையின் போது, கடிதம் எழுதி வைத்து விட்டு, இரண்டு மாணவிகளும் ஒரே நேரத்தில் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web