இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை!! உடன் இருந்தவருக்கு வலைவீச்சு!!

 
பள்ளி காதல்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தானே மாவட்டத்தில் அமைந்துள்ள குடிசைப்பகுதியில் ஒரு பெண் சடலம் அநாதையாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில்  அம்பர்நாத் போலீசார்  நேவாலி பாடா குடிசைப் பகுதியில் ஒரு குடிசை வீட்டில் பெண் சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

போலீசார் நடத்திய விசாரணையில், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்த பெண்ணின் பெயர் லட்சுமிபாய் மனோர் என்று தெரிய வந்துள்ளது. மேலும் அவர் அகோலாவை சேர்ந்தவர் என்றும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத வாலிருபர் ஒருவருடன் கொலை செய்யப்பட்ட வீட்டில் வந்து தங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலீஸ்
லட்சுமிபாயும், அந்த வாலிபரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வாலிபர் லட்சுமிபாயின் கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து லட்சுமிபாயுடன் தங்கியிருந்தவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மக்கள்  குடியிருக்கும் பகுதியில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web