இளம்பெண் தற்கொலை! ஆன்லைனில் ஹீலியம் வாங்கியது உறுதி!

 
இந்து

தமிழகத்தில் தற்கொலை மரணங்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான 4 மாதத்தில் பட்டதாரி பெண் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோபிசெட்டி பாளையத்தில் பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே பொலவக்காளிபாளையம் தோட்டக்காட்டூரில் வசித்து வருபவர் திருவேங்கடசாமி. இவரது மனைவி மரகதமணி. இந்த தம்பதிக்கு இந்து என்ற மகள் இருந்தார்.

போலீஸ்

பி.இ.பட்டதாரியான இவர், கோவையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஐ.டி.ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பட்டதாரி பெண் இந்துவுக்கும், நல்லகண்டன்பாளையம் துளசி நகரைச் சேர்ந்த விஷ்ணுபாரதிக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் இளம் தம்பதி சென்னையிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளனர்.  இதற்கிடையில் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரை பார்ப்பதற்காக இந்து தோட்டக்காட்டூருக்கு வந்துள்ளார். திடீரென்று நேற்று மதியம் இந்து வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டு நீண்ட நேரமாக வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் சந்தேகமடைந்த இந்துவின் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

தாய் மற்றும் 2 குழந்தைகள் தற்கொலை

அப்போது இந்து தனது முகத்தில் பிளாஸ்டிக் கவரை கழுத்து வரை முழுமையாக டேப் போட்டு ஒட்டியுள்ளார். மேலும் அந்த கவருக்குள் ஹீலியம் வாயுவை உள்ளே செலுத்தி தற்கொலை செய்து கொண்டார்.  இது குறித்து தகவல் அறிந்த கோபிசெட்டி பாளையம் போலீசார், இந்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டதாரி பெண் முகம் முழுக்க கவரை வைத்து முடி அதில் ஹீலியம் வாயுவை உட்செலுத்தி வித்தியாசமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் நடத்திய விசாரணையில் இந்து ஹீலியம் வாயு சிலிண்டரை ஆன்லைனில் வாங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web