கிக் பாக்சிங் போட்டியில் இளம் வீரர் மரணம்!! அதிர்ச்சி!!

 
நிகில்

 

கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகர்பாவியில் ரேபிட் ஃபிட்னஸ் உடற்பயிற்சி கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த உடற்பயிற்சி கூடம் சார்பில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் மைசூரை சேர்ந்த நிகில் (23) என்பவர் கலந்து கொண்டார்.

நிகில்

அப்போது நிகிலுக்கும் மற்றொரு வீரருக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியின் போது, எதிராளி தாக்கியதில் நிலைகுலைந்த போன நிகில் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நிகிலின் பெற்றோர் ஞானபாரதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

rip

அதில், போட்டி ஏற்பாட்டாளரின் அலட்சியத்தால் தங்கள் மகன் இறந்ததாக புகார் அளித்துள்ளனர். மேலும், போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் என எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், போட்டி ஏற்பாட்டாளர் நவீன் ரவிசங்கர் தலைமறைவாகி உள்ளார்.ரேபிட் ஃபிட்னஸ் அரங்கில் நடைபெற்று கொண்டிருந்த கிக் பாக்சிங் போட்டியில் வீரர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web