இளைஞர் ஓட, ஓட கல்லால் அடித்து கொலை!! தாயை கிண்டல் செய்ததால் விபரீதம்!!

 
கல்


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் வசித்து வந்தவர் சீனு. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மதுபோதையில் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த அந்த பெண் இது குறித்து தனது மகனிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அந்த பெண்ணின் மகன் ஆத்திரமடைந்து தனது மோட்டார் சைக்கிளில் தாயை ஏற்றிக் கொண்டு சீனு இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார்.

கட்டையால் அடித்து கொலை
இதை பார்த்து பயந்து போன சீனு அங்கிருந்து தப்பித்து ஓட முயற்ச செய்தார். சுதாரித்துக் கொண்ட அந்த வாலிபர், சீனுவை தெருவில் ஓட ஓட விரட்டி கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்தார். இதை வேடிக்கை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதற்கிடையில் சீனுவின் இறந்த உடலை தரதரவென இழுத்துவந்த வாலிபர் அதனை தனது தாயின் காலடியில் போட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

போலீஸ்

தகவல் அறிந்து விரைந்து சென்ற விசாகப்பட்டினம் போலீசார் சீனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வாலிபர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மதுபோதை காரணமாக ஒரு வாலிபர் தனது தாயை கிண்டல் செய்து கொள்ள முடியாத மகன், அவரை கல்லால் அடித்து படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாயின் மீது அளவுக்கதிகமாக பாசம் கொண்டிருந்தாலும் இன்னொரு உயிரை கொல்லும் செயல் கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web