பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை!! காவல்நிலையம் எதிரே பயங்கரம்!!

 
சென்னை


பட்டப்பகலில் நடுரோட்டில் அதுவும் காவல் நிலையம் முன்பு இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அம்பத்தூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அம்பத்தூர் அன்னை சத்யா நகரில் வசித்து வந்தவர் கார்த்திக் (20). இவர் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கார்த்திக் நேற்று மதியம் அயப்பாக்கம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை 9 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழி மறித்து நின்றது. இதை பார்த்த கார்த்திக் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பிக்க முயன்றார்.

அடித்துக்கொலை

இதை பார்த்த 9 பேரும், கார்த்திக்கை விடாமல் விடாமல் துரத்தி சென்றது. அப்போது அனைவரும் அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே வந்து நின்றனர். பின்னர் கார்த்திக்கை அந்த கும்பல் சரமாரியாக தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டித் தள்ளியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திக்குடன் சென்றிருந்த வெங்கடேஷ்  என்ற இளைஞருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. கொலை நடந்த பகுதியில் இருந்த பொது மக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

படுகொலை குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், ‘‘கார்த்திக் படுகொலை பழிக்குப்பழியாக நடந்துள்ளது தெரிய வந்தது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி கார்த்திக் கோஷ்டி மற்றும் கொலை செய்த 9 பேர் கொண்ட கோஷ்டி என இருதரப்புக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

உடல்
இதன் தொடர்ச்சியாகவே கார்த்திக்  கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான தேடுதல் வேட்டையில் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் சண்முகம் உள்ளிட்ட 10 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல் நிலையம் முன்பு 9 பேர் கொண்ட கும்பல் இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web