நாயுடன் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!! மனைவி இறந்ததால் விபரீதமுடிவு!!

 
உடல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் சின்ன சாயகார தெருவில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே வீட்டில் பட்டு சேலை வியாபாரம் செய்து வருகிறார். தனது வீட்டின் முதல் மாடியை ராஜ் (50) என்பவருக்கு பாஸ்கர் வாடகைக்கு விட்டிருந்தார். டெய்லரான ராஜ் கடந்த 2 வருடங்களாக அங்கேயே வளர்ப்பு நாயுடன் தங்கியிருந்தார்.

உடல்


இந்நிலையில் ராஜின் மனைவி இறந்துள்ளார். இதனால் அவர் சோகத்திலும், மன உளைச்சலிலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது மனைவியின் பிரிவை தாங்க முடியாத ராஜ், வீட்டு சுவரில் இனிமேல் எனக்கு வாழ விருப்பம் இல்லை என்று எழுதி வைத்துவிட்டு தான் வளர்த்து வந்த நாயுடன் சேர்ந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி மானவி தற்கொலை
4 நாட்களாகியும் ராஜ் வீட்டில் இருந்து வெளியே வரவிலை. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் வாடகை பணம் வாங்குவதற்காக அங்கு வந்த உரிமையாளர் பாஸ்கருக்கு சந்தேகம் வந்துள்ளது. உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீசார், ராஜின் உடலையும், நாயின் உடலையும் மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜின் உறவினர்கள், வீட்டு உரிமையாளர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மனைவி இறந்த துக்கம் தாங்காத கணவர் தான் ஆசையாக வளர்த்த நாயுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web