தொடரும் அதிர்ச்சி.. 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை ... கிணற்றில் தள்ளி கொடூரம்!

 
சிறுவன்

தர்மபுரி மாவட்டத்தில் 10 வயது சிறுவனை  காணவில்லை என அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தததில் அந்த 10 வயது சிறுவனை 17 வயது சிறுவன் தான்  அழைத்துச் சென்றதாகத்  தெரிய வந்தது.

சிறுவன்


 அந்த 17 வயது சிறுவனான பள்ளி மாணவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.   இதில், 10 வயது சிறுவனுக்கு அந்த 17 வயது சிறுவன் பாலியல் தொல்லை தந்ததும், அதை அந்த 10 வயது சிறுவன் வெளியே சொல்லி விடுவான் என சந்தேகப்பட்டதால்  கிணற்றில் தள்ளி 17 வயது சிறுவன் கொலை செய்ததும் தெரியவந்தது.
 இதன் பேரில்   தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்து 10 வயது சிறுவன் உடலை மீட்டனர்.

ஆம்புலன்ஸ்

இந்தக்  கொலை தொடர்பாக 17 வயது சிறுவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கைதான சிறுவனுக்கு கஞ்சா பழக்கம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.  கிராமப்புறங்களில் கஞ்சா எளிதில் கிடைப்பதால் சிறுவர்களின் வாழ்க்கை பாழாகி வருகிறது.   உடனடியாக கஞ்சா விற்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web