13 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்து பாலியல் சில்மிஷம்.. 60 வயது முதியவர் போக்சோவில் கைது!

 
சண்முகம்

திண்டிவனத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது முதியவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மனைவியை போலீஸார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் முருக்கேரியில்  கடந்த 19ம் தேதி மதியம் 1 மணியளவில், பெற்றோர் கடைக்கு பொருட்களை வாங்கி வருமாறு 13 வயது சிறுமியை அனுப்பி வைத்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (60) என்பவர் சிறுமியை இழுத்து வந்து தகாத முறையில் முத்தம் கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட முயன்றார்.

சிறுமி சத்தம் போட்டதும், யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் சிறுமி பதட்டத்துடன் நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து சண்முகாவின் மனைவி சாவித்திரி(54)யிடம் புகார் அளித்தபோது, சண்முகவும், அவரது மனைவியும் சேர்ந்து சிறுமியின் பெற்றோரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். சண்முகம் மற்றும் அவரது மனைவி சாவித்திரியை கைது செய்த போலீசார் விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அவர்கள் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web