மூளையை தின்னும் அமீபா நோய்க்கு 2 வயது சிறுவன் பலி!!
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் அலமோ நகரில் வசித்து வருபவர் ப்ரியானா பண்டி. இவரது மகன் உட்ரோ டர்னர் பண்டி இவருக்கு வயது 2. இவர் மூளையை உண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்டு ஜூலை 19ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தான். அவனுக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவனுக்கு மூளையை உண்ணும் அமீபா என்ற நெக்லேரியா ஃபோலேரி பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. நீச்சல் குளத்தில் விளையாடிய இந்த அமீபா அவனது உடலில் புகுந்திருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.இது குறித்து அவனின் தாய் “டர்னர் ஜூலை 19ம் தேதி அதிகாலை 2.56 மணிக்கு உயிரிழந்தான். கடந்த 7 நாட்களாக அவன் மிகக் கடுமையாகப் போராடினான். இதுவரை இந்த மூளையை உண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே உயிரோடு இருந்தனர்.
டர்னர் 7 நாட்கள் இதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தான். உலகிலேயே வலிமையான எனது மகன் தான் என் ஹீரோ. எனக்கு இப்படியொரு மகனைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி. எனது மகனை என்றாவது ஒரு நாள் சொர்க்கத்திற்குச் சென்று சந்திப்பேன்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். ஒரு வாரம் முன்பு டர்னருக்கு திடீரென காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டன. உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். முதலில் அந்த 2 வயதுக் குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் இருக்கலாம் என்றே மருத்துவர்கள் கருதினர்.
அதன் பிறகு நடத்தப்பட்ட சோதனையிலேயே அவருக்குக் கொடிய மூளையை உண்ணும் அமீபா பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
மூளையை உண்ணும் அமீபா பாதிப்பு சமீப காலமாக பெரும் கவலையை ஏற்படுத்தும் நோயாக உருமாறி வருகிறது. நெக்லேரியா ஃபோலேரி என்பது ஒரு வகை ஒற்றை உயிரணு அமீபா ஆகும். இது பொதுவாக ஏரிகள், ஆறுகள் மற்றும் வெந்நீர் ஊற்றுகளில் தான் உயிர் வாழும். மூக்கின் வழியாக நமது உடலில் நுழைந்து மூளையைத் தாக்கி விடுகின்றன. இதனால் தான் இது மூளையை உண்ணும் அமீபா என அழைக்கப்படுகிறது. இது ஒரு அரிதான நோயாக இருந்தாலும் எப்போதும் மிக மிக ஆபத்தானது.
இந்த நெக்லேரியா ஃபோலேரி நமது மூக்கின் வழியாக நுழைந்தால் மட்டுமே இந்தளவுக்கு ஆபத்து ஏற்படும் இந்த நீரைக் குடித்தால் நமக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. பொதுவாக நெக்லேரியா ஃபோலேரி பாதிப்பு ஏற்பட்டால் 12 நாட்களில் இதற்கான அறிகுறிகள் ஆரம்பிக்கும். தலைவலி, காய்ச்சல், வாந்தி, வலிப்பு, கோமா ஆகியவை அதன் அறிகுறிகள். நோய் பாதிப்பு ஏற்பட்டு 18, 19 நாட்களில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.அமெரிக்காவில் 1962 முதல் 2023 வரையில், பாதிக்கப்பட்ட 150 பேர்களில் வெறும் 5 பேர் மட்டுமே மீண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக நெக்லேரியா ஃபோலேரி பாதிப்பு ஏற்பட்ட 3 நாட்களில் மரணம் உறுதி என்றே இதுவரையான ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?