வீட்டிற்கு வந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம்.. மார்க்சிஸ்ட் செயலாளர் போக்சோவில் கைது!

கேரளாவின் எர்ணாகுளம் அருகே உள்ள புத்தன்வேலிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (62). அவர் அந்தப் பகுதியின் மார்க்சிஸ்ட் செயலாளராக இருந்தார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் அவரது வீட்டிற்கு விளையாட வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி தனது வீட்டிற்கு வந்த சிறுமியை சுப்பிரமணியன் பாலியல் வன்கொடுமை செய்தார்.
இது குறித்து அறிந்ததும், சிறுமியின் பெற்றோர் செங்கமநாடு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தத் தகவல் அறிந்ததும், சுப்பிரமணியன் திடீரென தலைமறைவானார். போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையில், சுப்பிரமணியன் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அதன் பிறகு, வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகியும், சுப்பிரமணியன் போலீசாரிடம் சிக்கவில்லை. சிபிஎம் அவரைப் பாதுகாக்க முயற்சிப்பதாக புகார்கள் வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம், போலீசார் சுப்பிரமணியனை கைது செய்து விசாரித்தனர். இதையடுத்து போலீசார் அவரை ஆலுவா சிறையில் அடைத்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!