மின்கம்பியில் பிணமாக தொங்கிய கொடூரம்!! மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை!!

 
டேனியல்

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் காந்திரோடு பகுதியில் வசித்து வருபவர் 23 வயது டேனியல் . இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக டேனியல் கோபித்து கொண்டு பழைய பெருங்களத்தூரில் வசித்து வரும் தனது நண்பர் மணிகண்டன் வீட்டுக்கு வந்து விட்டார்.   இரவு 11 மணிக்கு  டேனியலும், மணிகண்டனும் வீட்டின் மாடியில் இருந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டன், டேனியலிடம் நீ வீட்டுக்கு செல்வது தான் நல்லது என அறிவுரை கூறியுள்ளார்.ஆனால் டேனியல் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இனி வீட்டுக்கு போகமுடியாது . அதற்கு தற்கொலை செய்து கொள்வது மேல் எனத் தெரிவித்தார்.  

டேனியல்

டேனியலுக்கு போதை தலைக்கேறியதை அறிந்த மணிகண்டன் அவரை மாடியிலேயே இருக்க சொல்லி விட்டு கீழே இறங்கி  வீட்டுக்குள் சென்று பாய், தலையணைகளை எடுக்க சென்றார். அந்த நேரத்தில் டேனியல் மாடியில் இருந்து திடீரென தெருவில் உள்ள மின்கம்பிகள் மீது குதித்தார். இதில் மின்கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி அவர் துடிதுடித்து உயிரிழந்தார். அந்த வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்கள் இதை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.  இதுகுறித்து அக்கம்பக்கத்தினர்   தீயணைப்பு மற்றும்  மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

 உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக  விரைந்து வந்து மின்கம்பியில் துடிதுடித்து கொண்டு இருந்த டேனியலை மீட்டனர். மருத்துவ குழுவினர் அவரை பரிசோதனை செய்ததில்  அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.  இதனையடுத்து டேனியலின்   உடலை பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டேனியல்

அதன்படி அவர் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மின்வாரிய ஊழியர்கள் டேனியல் குதித்ததால் மின்கம்பம் பழுதானது. மின்சார ஊழியர்கள்  மின்கம்பத்தை சீரமைத்து சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு  அந்த பகுதிக்கு மின் இணைப்பை கொடுத்தனர். மாடியில் இருந்து மின்கம்பத்தின் மீது குதித்து இளைஞர் தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web