சாலையோரம் நின்று கொண்டிருந்தவர் மீது அதிவேகத்தில் மோதிய கார்.. வெளியானது பகீர் சிசிடிவி காட்சி..!!

 
ராசிபுரம் விபத்து சிசிடிவி

ராசிபுரம் அருகே சாலையோரம் நின்று நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த நபரின் மீது அதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பிற்படுத்தப்பட்டோர் காலனி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(42) கட்டிட மேஸ்திரி ஆக பணிபுரிந்து வரும் நிலையில் திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நண்பர்களின் தாயார் இறந்ததாக கூறப்படும் நிலையில் அதற்கு சதீஷ் செல்ல முடியாத காரணத்தினால் (24.11.23) அன்று நண்பரை சாலையில்  சந்தித்து இருசக்கர வாகனத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது முத்து காளிப்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனது வீட்டை நோக்கி காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.காரானது நகரின் முக்கிய பகுதியான கடைவீதியில் அதிவேகமாக சென்று கட்டுபாட்டை இழந்து சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த சதீஷின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது விபத்துக்குள்ளானது சதீஷ் இருசக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் அருகாமையில் இருந்தவர்கள்  சதிசை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்த நிலையில் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ராசிபுரம் நகர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணியாக சாலையோரங்களில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால்  போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் ஒருவழிப் பாதையில் அதி வேகமாக கார் சென்று விபத்து ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது...

From around the web