பகீர்... விடுதியிலேயே குழந்தை பெற்றெடுத்த கல்லூரி மாணவி ... லிவிங் டூ கெதரால் விபரீதம்!

 
குழந்தை

 

தர்மபுரி மாவட்டத்தில், ஆதி திராவிடர் விடுதியில் தங்கியிருந்தப்படியே அரசு கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், கடும் வயிற்றுவலியால் துடிதுடித்த நிலையில், தங்கியிருந்த விடுதியிலேயே பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கியிருந்தப்படியே அரசு கல்லூரிக்கு தினந்தோறும் சென்று படித்து வந்த மாணவி ஒருவர், விடுதியில் தங்கியிருந்த போது நேற்று முன் தினம் பிப்ரவரி 13ம் தேதி அதிகாலையில் கடும் வயிற்று வலியால் துடித்துள்ளார்.

கர்ப்பிணி மாணவி

மாணவியின் அலறல் சப்தம் கேட்டு வந்த விடுதி காப்பாளர், கல்லூரி மாணவி பிரசவ வலியால் துடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சற்று நேரத்தில், கல்லூரி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது விடுதியை பரபரப்புக்குள்ளாக்கியது. உடனடியாக விடுதி காப்பாளர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணையில், மனோஜ் எனும் 21 வயது இளைஞருடன் மாணவி லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. அதன் பின்னர், விடுதி நிர்வாகத்தினர், மாணவிக்கு குழந்தை பிறந்தது குறித்தும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பது குறித்தும் ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இளைஞர் மனோஜூக்கும், மாணவியின் குடும்பத்தினருக்கும்  போலீசார் மூலம் தகவல் தெரிவித்தனர்.

தர்மபுரி


இரு தரப்பினரும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், இதுவரை இது குறித்து எந்தவொரு புகாரும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. 
மாணவி ஆதிதிராவிடர் விடுதியில் சேரும் போதே 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், இது குறித்து மாணவியிடம் விடுதி நிர்வாகத்தினர் கேட்டபோது, தன்னுடைய உடல்வாகு இயல்பிலேயே இப்படித்தான் எனக் கூறி மாணவி, கர்ப்பமானதை மூடி மறைத்ததாகவும் கூறப்படுகிறது

From around the web