9 வயது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை!! அதிர்ச்சி வாக்குமூலம்!!

 
ஹிமா பிந்து

தெலங்கானா மாநிலம் சாந்தாநகரில் வசித்து வருபவர் சந்திரசேகர் . இவருக்கு 2011ல்  ஹிமாபிந்துவுடன்  திருமணம் நடைபெற்றது. இருவரும் சில ஆண்டுகள் அமெரிக்காவில் பணி புரிந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கு  9 வயதில் மகள் உள்ளார்.  கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பச் சண்டை ஏற்பட்டது.  இதனால் கணவனை பிரிந்த அவரது மனைவி, மகளுடன்  பெற்றோர்  வீட்டில் வசித்து வருகிறார்.

கத்திக்குத்து

இந்நிலையில், சந்திரசேகர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு சைக்கோவாக  மாறிய சந்திரசேகர் மனைவி மகளை கொலை செய்ய முடிவு செய்தார். வாரத்திற்கு  3 நாட்கள் மகளை பார்க்க பள்ளிக்கு செல்வது வழக்கம்.  அதே போல்  கடந்த வெள்ளிக்கிழமையும் சென்றிருந்தார்.  அப்போது, மகளை பல இடங்களுக்கு சுற்றிக்காட்டியவர்   பிறகு  மகளை காரிலேயே கழுத்தை அறுத்து கொலை செய்தார்.  

போலீஸ்

விபத்து போல்  செட் செய்ய முயற்சித்து கொண்டிருந்த போது அந்த வழியாக காரில் சென்றவர்கள்   அதனைப் பார்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  சந்திரசேகரை பிடித்து விசாரணை நடத்தியதில்  மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் மகளை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில்  வழக்கு பதிவு செய்யப்பட்டு சந்திரசேகர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

From around the web