தீ விபத்தால் வெடித்து சிதறிய பட்டாசுக் கடை.. இருவர் தீயில் கருகி பலி !!

 
குமார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள புத்துக்கோயில் பகுதி சாலையோரம், குமார் என்பவர் ‘ஸ்ரீராம்’ என்ற பெயரில் பட்டாசுக் கடை நடத்தி வந்தார். பட்டாசு கடை அருகே பட்டாசு குடோனும் அமைந்துள்ளது. இந்த பட்டாசு கடைகளில் 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர்.

இன்று காலை வழக்கம்போல கடையைத் திறந்து வைத்து குமார் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தார். கடைக்குள் 12 வயது சிறுவனான தயாமூர்த்தி என்பவனும் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று மதியம் பட்டாசுக் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமள எரிந்து கடையில் இருந்த பட்டாசுகளில் தீ பரவியது. இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறினஅருகே இருந்த பட்டாசு குடோன் மீது தீப்பொறி விழுந்தது. குடோனில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடிக்க தொடங்கின. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் உட்பட குழந்தைகள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

குமார்

அதேபோல், கடைக்குள் இருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துச் சிதறியதால், குமாரும், சிறுவனும் வெளியே தப்பித்து வர முடியாமல் கடைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்ததும், தீயணைப்புத்துறை வீரர்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும கடை உரிமையாளர் குமாரும், சிறுவனும் உடல் கருகி உயிரிழந்துவிட்டனர். மேலும், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

பட்டாசு கடை

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அம்பலூர் காவல் நிலைய போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பட்டாசுகளை அடுக்கியபோது ஏற்பட்ட உரசல்களால், வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியிருக்கிறது. விசாரணைக்குப் பின்னரே விபத்துக்கான உண்மைக் காரணம் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

From around the web