அதிர்ச்சி வீடியோ.. சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்.. ஓட்டுநர் இன்றி 100 கி.மீ வேகத்தில் சென்ற சரக்கு ரயில்!

 
சரக்கு ரயில்

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள கத்துவா பகுதியில் சரக்கு ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஓட்டிநர் இல்லாமலே இந்த ரயில் இன்று தானே இயங்க ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் சுமார் 100 கிமீ வேகத்தில் ரயில் சென்றுள்ளது.


இதுகுறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், மற்ற ரயில்கள் மீது மோதாமல் இருக்கவும், ரயில் சீராக இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கத்துவா பகுதியில் இருந்து புறப்பட்ட ரயில் கடும் முயற்சிக்கு பிறகு ஹோஷியாபூர் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

டிரைவர் இல்லாமல் ரயில் ஓடும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட The Unstoppable (The Unstoppable) படம் போலவே இச்சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web