குழந்தைகள் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்!!

 
குழந்தை

உத்தரப்பிரதேச மாநிலத்தில்   தொழிலதிபவர் ஒருவருக்கு ஒரு மகனும்,  ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.  இதனால் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதனை கண்டித்த  கணவர்   மனைவியின் இன்ஸ்டா கணக்கை அவரது கணவர் முடக்கியுள்ளார். இதன் காரணமாக கணவன், மனைவிக்குள் தகராறு இருந்து வந்தது.

 

காதல்

அத்துடன் இன்ஸ்டாகிராம் மூலம் தனக்குத் தெரியாமல் யாரிடமோ மனைவி பழகுகிறாரோ என்ற சந்தேகம்  எழுந்துள்ளது.  பூர்வாஞ்சல் விரைவு சாலையில் தொழிலதிபரின் கார்  நேற்று நின்று கொண்டிருந்தது. பூட்டப்பட்ட காருக்குள் தொழிலதிபர் அழுது கொண்டிருந்தார்.  அவர் அருகில் அவரது 2 குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர். இது குறித்து அவரது 12 வயது மகள் “ காரில் வரும் போது தனது தாய்க்கும், தந்தைக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த தந்தை, தாயின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டார்”  எனக் கூறியுள்ளார்.

இன்ஸ்டா

 

இதையடுத்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர்  தொழிலதிபரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைக்கு இன்ஸ்டாகிராம் கணக்கு தான் பிரச்சினையா வேறு ஏதும் பிரச்சினையா என தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு  வருகின்றன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web