அதிர்ச்சி!! டெட்பாடியுடன் டாக்சியில் ஏறிய நபர்!!

 
ஓலா டாக்சி

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர்   மனோஜ். ஓலா கார் டிரைவராக பணிபுரிந்து வரும் மனோஜுக்கு  ஜூலை  11ம் தேதி இரவு நொய்டாவிலிருந்து செல்ல  புக்கிங் கிடைத்தது. அந்த புக்கிங்கை ஏற்றுக்கொண்ட மனோஜ் பிக்கப் இடத்திற்கு சென்றார். அங்கு சவுரப் என்பவருடன் மேலும் 2 பேர் டாக்சியில் பயணம் செய்ய தயாராக இருந்தனர். சாக்குமூட்டையில் சில லக்கேஜ்களை  கார் டிக்கியில் வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். டிக்கியைத் திறந்தபோது, எடுத்துவைக்கப்பட்ட மூட்டைகளில் ஒன்றில் சிறு அசைவும், ரத்தக் கறை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஓலா டாக்சி
 
இந்நிலையில், அந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று இவர் கேட்டுள்ளார். அப்பொழுது இருவரும் சேர்ந்து இவரை தாக்க தொடங்கினர்.  உடனடியாக ஓலா டிரைவர் நெடுஞ்சாலையில் நின்றிருந்த  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.  இது குறித்து விசாரணை  நடத்தப்பட்ட விசாரணையில்   " ஜூலை  11ம் தேதி மாலை, குசும் குமாரி என்பவரும், அவரின் மைத்துனர் சவுரப்பும் மகாராஜபூருக்கு வந்திருந்தனர்.  குசும் குமாரிக்கு அவர்களின் மூதாதையரின் சொத்திலிருந்து சுமார் ரூ.40 கோடி வரவிருந்த நிலையில், குசும் குமாரிக்கும் சவுரப்புக்கும்  இடையே  வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

ஓலா டாக்சி
அவரை கொலைசெய்ய வேண்டும் என ஏற்கெனவே திட்டமிட்ட சவுரப், மகராஜ்பூருக்கு அவரது கூட்டாளிகளை வரவழைத்து கொலை செய்துள்ளனர். அந்த உடலை கார் புக் செய்து அப்புறப்படுத்த முயற்சி செய்துள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடித்து கொலை செய்து டாக்சியில் உடலை அப்புறப்படுத்த முயன்றது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web