ரூ.450 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் - பரிசீலனையில் உள்ள முக்கிய இடங்கள்!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் நிலவும் கடும் இடநெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது தொடர்பான ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன.

தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு முதலமைச்சரின் அலுவலகத்தை மாற்றும்প্রাக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோட்டை வளாகத்தின் இடநெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சி மீண்டும் தொடங்கியுள்ளது.

முதல்வர் முதலமைச்சர் விஜய்

புதிய வளாகம் அமைப்பதற்கான இறுதி இடம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பட்டினப்பாக்கம் மற்றும் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் உள்ளிட்ட பகுதிகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்த முறையான மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த கால ஆட்சிகளில் ஜெயலலிதா மற்றும் மு.கருணாநிதி ஆகியோரின் காலகட்டங்களிலும் தலைமைச் செயலக இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.