காதல் கல்யாண விவகாரம்.. பிரச்சனையில் தலையிட்ட பஞ்சாயத்து தலைவருக்கு கத்திக்குத்து..!

 
கதிர்வேல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா மல்லசமுத்திரம் ஒன்றியம் பருத்திப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருப்பவர் கதிர்வேல் (55). படுகாயமடைந்த அவர், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Paruthipalli

இச்சம்பவம் குறித்து பருத்திப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் கதிர்வேல் கூறுகையில், ""எனது ஊராட்சிக்கு உள்பட்ட சோமனம்பட்டி கிராமத்தை சேர்ந்த எனது உறவினர் மணி மகன் செல்வராஜ்(33). தனது உறவினர் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகள் கவுதமிக்கு(26) கடந்த 2ம் தேதி காதல் திருமணம் நடந்தது.அதன்பின், பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த அவர்கள், பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, இருவரும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததால், காவல் துறையினர் சமரசம் செய்து, அவர்களின் விருப்பப்படி வாழ அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், செல்வராஜ், மகள் உறவு முறை கொண்ட  பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், அப்பகுதி மக்களிடையே குழப்பமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் எனது தலைமையில் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் இருவரும் சேர்ந்து வாழ்வது உறுதியானதால், கௌதமியின் தாயார் வசந்தா, ரூ.7 லட்சம் செலவு செய்து கௌதமியை நர்ஸ் வேலைக்கு படிக்க வைத்ததால் தற்போது கடனாளியாக இருப்பதாகவும் அந்த கடன் தொகையை கட்டிவிட்டு நீ விருப்பப்பட்டவருடன் வாழ்ந்து கொள் என கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் தனக்கு சொந்தமான வீட்டை எழுதி தருவதாக கூறிய செல்வராஜ், மறுநாள் கிரய செட்டில்மென்ட் செய்து தருவதாக கூறினார். ஆனால், மறுநாள் பஞ்சாயத்துக்கு செல்வராஜ் மற்றும் அவரது உறவினர்கள் வராததால், பஞ்சாயத்துக்கு வந்த சிலர்,  மாலையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறினர்.இதனால், ஓய்வெடுக்க வீட்டுக்கு வந்தபோது, ​​நேற்று இரவு 10 மணியளவில் வீட்டில் படுத்திருந்த போது, ​​திடீரென ஒருவர் ஓடி வந்து, இனி பஞ்சாயத்து தலைவராகவும் இருக்க முடியாது உயிரோடும் இருக்க முடியாது என கூறிக் கொண்டே கத்தியால் என்னை குத்தினார்.

அப்போது நான் அலறியதும், என் மனைவியும் மகளும் ஓடி வந்தனர். அதை பார்த்ததும் கத்தியால் குத்திய நபர் தனது இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பியோடினார். அப்போது  என்னை கத்தியால் குத்தியவர் குடியரசு. “அவர், மூர்த்தி, சரண் ஆகியோர்தான் நேற்று செல்வராஜின் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு அவருக்கு ஆதரவாக பேச வந்துள்ளனர்.

Police station

செல்வராஜின் தூண்டுதலின் பேரில் தான் 3 பேரும் சேர்ந்து கத்தியால் குத்த வந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாகவும் கதிர்வேல் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி, சரண் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பருத்திப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web