”என்னை தாண்டி போ பார்ப்போம்”.. நாக பாம்பை தடுத்து நிறுத்திய பூனை.. வைரல் வீடியோ..!!

 
பூனை - பாம்பு

செல்லப்பிராணி  பூனை, வீட்டுக்குள் பாம்பு நுழைவதை தடுத்து நிறுத்திய துணிகர சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் நகர் சரவணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜர். இவரது வீட்டில் நான்கு அடி நீளமுள்ள நாக பாம்பு ஒன்று கேட்டில் இருந்து வீட்டின் படிக்கட்டு நோக்கி வந்து கொண்டு இருந்தது. இதனையடுத்து நாக பாம்பு படிக்கட்டில் ஏறி வீட்டிற்குள் நுழைய முற்பட்டது. அப்போது அந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பூனை அந்தப் பாம்பை வீட்டுக்குள் நுழைய விடாமல் பாம்பை தடுத்தது. பூனை சீறலை அறிந்தவுடன் வீட்டுக்குள் இருந்தவர்கள் கதவை மூடினர். 

இதையடுத்து, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரர் ஒருவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாம்பு பிடி வீரர் விரைந்து வந்து பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்றார். முன்னதாக பூனை மற்றும் பாம்பு ஒன்றுக்கொன்று எதிர்கொள்ளும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

Watch Cat vs Snake: pet cat stopped a cobra trying to enter the house in Coimbatore viral video

நாக பாம்பும் பூனையும் நேருக்குநேர் 15 நிமிடம் ஒன்றை ஒன்று முறைத்து பார்த்துக்கொண்டு இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். செல்லப்பிராணியான பூனை, வீட்டுக்குள் பாம்பு நுழைவதை தடுத்து நிறுத்திய துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

From around the web