அதிர்ச்சி வீடியோ... 30 அடி பள்ளத்தில் பாய்ந்த பள்ளிப் பேருந்து... அலறித் துடித்த மாணவ மாணவிகள்!

 
பள்ளிப் பேருந்து
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இருந்து பள்ளி பேருந்து மாணவ மாணவிகளை காலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்றிக் கொண்டு செல்வது வழக்கம் . அந்த வகையில் இன்று காலையும்  அப்பள்ளி வாகனம் வழக்கம்போல பட்டணம் பகுதியில் உள்ள 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. 

ஜே.ஜே நகர் செல்லும் 30 அடி அகல மண் சாலையில் பள்ளி வாகனம் சென்று கொண்டிருந்தபோது  எதிரே இருசக்கர வாகனம் ஒன்று வந்தது. இதற்கு வழிவிடுவதற்காக  பள்ளி வாகன  ஓட்டுநர் சாலை வலது புறமாக வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார்.

பள்ளிப் பேருந்து


திடீரென எதிர்பாராத விதமாக சாலையின் பக்கவாட்டில் மண் சரிந்ததால் பள்ளி வாகனம் 7 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. பேருந்தில் இருந்த மாணவ மாணவிகள் கூச்சலிட்டனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த  பொதுமக்கள்  மாணவ மாணவியரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   இந்த விபத்தில் மாணவர் ஒருவருக்கும் மாணவி ஒருவருக்கும் காயங்கள்  ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து  காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளி வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் அங்கிருந்த கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web