தோழிகளின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய கல்லூரி மாணவி!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் காஜப்பூரில் செயல்பட்டு வருகிறது ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மந்தாஷா காஸ்மி தன்னுடன் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் குளிக்கும் போது, உறங்கும் போது, உடை மாற்றும் போது அவர்களுக்கு தெரியாமல் ஆபாச படம் எடுத்துவந்துள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆகஸ்ட் 7ம் தேதி அதே கல்லூரியில் 2 ம் ஆண்டு படித்து வரும் மாணவர் முகமது அமீருக்கு அனுப்பியுள்ளார்.
இதில் அமீர் தன்னுடைய அறை நண்பர்களுக்கும் அந்த புகைப்படங்கள் மற்றும் அந்த ஆபாச வீடியோக்களை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ, புகைப்படங்களைக் காட்டி மந்தாஷா காஸ்மி சம்பந்தப்பட்ட மாணவிகளை மிரட்டி வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், அவர்களின் குற்றச்சாட்டு உண்மை எனத் தெரிய வந்ததை அடுத்து இந்த 2 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது.
மேலும். விசாரணைக்குழுவின் அறிக்கை ஒரு மாதத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து மாணவி மிரட்டிய விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?