நிக்கல் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி..!!

 
நிக்கல் தொழிற்சாலை தீ விபத்து

இந்தோனேசியாவில் உள்ள சீன நிக்கல் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் இந்திய நேரப்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைப்பெற்றுள்ளது. அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் சில முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டன. சுலவேசி தீவில் உள்ள மொரோவலி தொழில் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Fire at Chinese-owned Indonesia nickel smelter kills 13 workers, injures 46  — BenarNews

நிக்கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 38 பேர் படுகாயமடைந்துள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயை அணைக்க நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு பெரிய வெடிப்பு உள்ளே உள்ள அனைத்தையும் சூழ்ந்தது. தீயணைப்பு வீரர்கள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க முயன்றனர்.

At least 13 dead and dozens injured in furnace explosion at nickel factory  in Indonesia | World News | Sky News

இந்த சம்பவத்தில், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்களில் 8 பேர் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள், ஐந்து பேர் சீனாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டனர். உலை பழுதுபார்க்கும் பணியின் போது வெடி விபத்து ஏற்பட்டது முதலில் உறுதி செய்யப்பட்டது. அங்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பதால் அதன் விளைவு மோசமாகியதாக பூங்காவின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். இந்த நிக்கல் உற்பத்தி அலகு இந்தோனேசியா Tingshan Stainless Steel (ITSS) க்கு சொந்தமானது. இந்த அலகு உலகின் மிகப்பெரிய நிக்கல் ஏற்றுமதியாளராகத் தொடர்கிறது. பெருநிறுவன அலட்சியமே வெடிப்புக்கு காரணம் என சிலர் குற்றம் சாட்டுகின்றனர். எவ்வாறாயினும், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகளுடன் விசாரணை நடத்தி வருவதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டெடி குர்னியாவன் தெரிவித்தார். களம் இறங்கிய மீட்பு படையினர் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

From around the web