கோர விபத்து... இன்னோவா மீது மற்றொரு கார் மோதி 7 பேர் துடிதுடித்து பலி!

 
கார் மோதி


திருநெல்வேலி மாவட்டம்  வள்ளியூர் அடுத்துள்ள கண்ணங்குளம் பகுதியில் வசித்து வருபவர்  மாரியப்பன். கட்டிட தொழிலாளியான இவர். மனைவி, மகன்கள் உட்பட  9 பேருடன் மதுரையில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தார். அனைவரும்  இன்னோவா காரில் மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். காரை மாரியப்பன் ஓட்டி வந்துள்ளார். அந்த காரில் மனைவி அன்பரசி (32), மகன்கள் பிரவீன் (10), அஸ்வின்(8) மற்றும் உறவினர்களான அக்ஷயா தேவி, பாலகிருஷ்ணவேணி (40) அவரது மகள் பிரியதர்ஷினி (20), மகன் சுபிசந்தோஷ் (18), பெரியவர் மில்கிஸ் (60) ஆகிய 9 பேர் இருந்துள்ளனர். 
மாலை 4 மணிக்கு  உணவு உண்ட மயக்கத்தில் மாரியப்பன் காரை ஓட்டி வந்துள்ளார். கார் வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரம்  கீழூர் பகுதியில் உள்ள பாலம் இறங்கியதும் வரும் சாலை வளைவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய இன்னோவா கார் சென்டர்மீடியனில் மோதி எதிர்புறம் சாலைக்கு பாய்ந்து சென்றது. 
அந்த சாலையில் வந்து கொண்டிருந்த ஸ்விஃப்ட் டிசைர் கார் மீது இன்னோவா கார் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் எதிரே வந்த நெல்லை பாளையங்கோட்டையில் வசித்து வரும்  டக்கரம்மாள்புரத்தைச் சேர்ந்த தனிஸ்லாஸ், அவரது மனைவி மார்கரெட் மேரி, மகன் ஜோபர்ட்,  இவரது மனைவி அமுதா மற்றும் இவர்களது குழந்தைகள் ஜொகனா,  ஜொகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   
இந்த கோர விபத்தில் மாரியப்பனுடன் காரில் பயணித்த மில்கிஸ் என்பவரும் உயிரிழந்தார்.இதில் இன்னோவா மீது மோதிய ஸ்விஃப்ட் டிசைர் காரில் பயணித்த ஜோகனா என்ற இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த போலீசார் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் உதவியுடன் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  
லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் மாரியப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்ததாகவும், அப்போது தூக்க கலக்கத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறமாறாக ஓடி எதிர்புறம் சென்றுக்கொண்டிருந்த கார் மீது மோதியதாக தெரிவித்தார். மேலும் உயிரிழந்த 7 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.  விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web