அதிர்ச்சி... ஆவின் பால் பண்ணையில் தலை துண்டாகி இளம்பெண் பலி.. வலுக்கும் சர்ச்சைகள்!

திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் நேற்றிரவு ஆகஸ்ட் 20ம் பால் பாக்கெட்டுகள் உற்பத்தியின் போது பணியில் இருந்த உமா மகேஸ்வரி எனும் இளம் பெண் ஒப்பந்த தொழிலாளரின் சுடிதார் துப்பட்டா இயந்திரத்தின் கன்வேயர் பெல்டில் மாட்டிக் கொண்டதில், அவரது தலைமுடியும் சேர்த்து சிக்கிக் கொண்டதால் அவரது தலை துண்டாகி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த உமா மகேஸ்வரிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
கள்ளச்சாராய உயிரிழப்பின் போது முதல்வர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி அறிவித்து, உடனடியாக வழங்கியதைப் போல, தன் குழந்தைகளைக் காப்பாற்ற வேலைக்கு சென்ற நிலையில், உயிரிழந்த உமா மகேஸ்வரியின் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ரூ.1 கோடி நிவாரண தொகை அளிக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதே சமயம், பொதுவாக பால் பண்ணைகளில் பணியாளர்கள் ஓவர் கோட் அணிந்தப்படியும், தலைமுடி தெரியாமல் இருக்க பிளாஸ்டிக் தொப்பியும் அணிந்தபடி தானே பணிபுரிவார்கள்.. பின் எப்படி அவரது தலைமுடியும், சுடிதார் துப்பட்டாவும் சிக்கியது என்றும் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!