என் பிரண்ட்ஸ்-க்கு மாப்பிள்ளை பிடிக்கல.. கல்யாணத்தை நிறுத்திய பெண்ணால் அதிர்ச்சி..!!
தன் தோழிகளுக்கு மாப்பிள்ளை பிடிக்காததால் கல்யாணத்தை நிறுத்திய இளம்பெண்ணால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே காட்டு கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் சீனிவாசன். இவருக்கு சபீனா என்ற மகள் உள்ளார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு சென்னை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார்.இந்நிலையில் இவருக்கும் அவரது உறவினரான இளைஞர் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 29ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இதற்கிடையில் தன் தோழிகளுக்கு மாப்பிள்ளை பிடிக்காததால் எனக்கும் அவரை பிடிக்கவில்லை என்று கூறி கடந்த 27ஆம் தேதி சபீனா வீட்டை விட்டு வெளியேறி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதனையடுத்து காவல்துறையினர் சபீனாவை காப்பகத்தில் சேர்த்தனர். பின்னர் சபீனா பெற்றோரிடம் செல்ல விருப்பம் தெரிவித்ததால் அவரை காப்பகத்தில் இருந்து மீட்டு போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் வீட்டிற்கு சென்ற சபீனா மன வேதனையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சபீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைதொடர்ந்து இந்த சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சபீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.