வைரல் வீடியோ!! ரூ12 லட்சம் செலவில் நாயாக மாறிய இளைஞர்!!

 
நாயாக மாறிய இளைஞர்

இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு நாயா போகலாம் என சலிப்பில் பலர் கூறுவதுண்டு. தற்போது  அதனை நிஜமாக்கும் வகையில் ஒருவர் நாயாகவே மாறியுள்ளார். ஜப்பான் நாட்டில் வசித்துவரும் டோகோ ஈவி என்பவர் ‘ஐ வாண்ட் டூ பி அனிமல்‘ எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் வளர்ப்பு விலங்குகளைக் குறித்த வீடியோக்களையும் தகவலையும் வெளியிட்டு வரும் நிலையில் அவருக்கு சிறு வயதில் இருந்தே நாய்கள் என்றால் மிகவும் பிரியம் என்றும் தான் ஒரு நாயாக பிறந்து இருக்கலாம் என்றும் கூறிவந்துள்ளார்.


இந்நிலையில் ஏன் தன்னை ஒரு நாயாக மாற்றிக்கொள்ளக் கூடாது என்று நினைத்த டோகோ, தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான ஆடைகளை உருவாக்கும் ஜப்பானிய நிறுவனமான ஜெப்பெட் டோகோவை அனுகியுள்ளார். இதையடுத்து டோகோவின் உருவத்தை முழுவதுமாக மறைத்து நாய் போன்றே இருக்கும் ஆடை ஒன்றை அந்த நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது. இதற்கு மொத்தமாக 40 நாட்கள்   ஆகியிருக்கிறது. இப்படி மனிதனாக இருக்கும் டோகோவை நாய் உருவத்திற்கு மாற்றுவதற்கு 22000 யென் செலவு செய்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சத்திற்கும் மேல் அதிகமாக ஆகியிருக்கிறது.  

நாயாக மாறிய இளைஞர்
தத்ரூபமாக தெரியும் சிலைகள், உடைகள், 3-டி மாடல்கள் போன்றவற்றை உருவாக்குவதில் இந்த நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது. டோகோ கூலி இனத்தை சேர்ந்த நாயை போல வடிவமைக்கப்பட்டு உள்ளார். இது நான்கு கால்களில் நடக்கும் உண்மையான நாயின் தோற்றத்தை உருவாக்குகிறது என ஜெப்பெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்  கூறுகிறார்.  
அந்த நபர் தனது யூடியூப் சேனலில் முதல் முறையாக தான் நாய் உருவத்துக்கு மாறியிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். நான் மிருகமாகவே இருக்க விரும்புகிறேன் என்ற தலைப்பில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.  இந்த வீடியோவை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். இந்த வீடியோ ஜெர்மன் தொலைக்காட்சிக்காக ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் தான் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.  நாயாக மாறி உள்ள டோகோ, மற்றவர்கள் கொடுக்கும் போலி மரியாதையை விரும்பாததால், தனது மனித அடையாளத்தை மறைக்க விரும்பியதாகவும் தனது வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web