பற்றி எரிந்த பச்சை வாழை மரங்கள்!! 1000க்கும் மேற்பட்ட மரங்கள் தீயில் கருகி நாசம்!!

 
தீவிபத்து

தேனி மாவட்டம்  உப்புக்கோட்டை   தனியார் பள்ளிக்கு மிக அருகில்  3 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான வாழைக்கொல்லை இருந்தது. இந்த வாழைக்கொல்லையில் வாழை மரங்கள் காய்கள் விட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில்   நேற்று இரவு திடீரென தீப்பற்றியது. காய்ந்து கிடந்த வாழை சருகுகளில்  அந்த தீ எளிதில் பரவி வேகமாக மரங்கள் மீது பரவின. பச்சை வாழை மரங்கள்  தீப்பற்றியதில் கொழுந்து விட்டு எரிந்தது.  

தோட்டத்து பணியாளர்  உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர்  தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு  வீரர்கள்  சுமார் 1 மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக  அணைத்தனர். 


இந்த தீவிபத்தில்  தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார்  1000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்துக்கு சதி வேலை காரணமா அல்லது எதேச்சையாக தீப்பற்றியதா  என்பது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web