19 வயசு தான்... ஏசி 3 வது மாடியில் இருந்து தலையில் விழுந்து இளைஞர் பலி... பெரும் சோகம்!
இந்தியாவின் தலைநகர் டெல்லியின் தோரிவாலா பகுதியில் தேசபந்து குப்தா சாலையில் வசித்து வருபவர் 18 வயது ஜித்தேஷ். இவர் அவருடைய நண்பரான பிரான்ஷு (17) என்பவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஜித்தேஷ், தெருவில் ஸ்கூட்டர் ஒன்றில் அமர்ந்தபடி நண்பருடன் பேசியபடி காணப்பட்டார். இறுதியாக ஜித்தேஷ் செல்லும் முன், அவரை அழைத்து பிரான்ஷு கட்டி பிடித்து கொண்டார்.
देखिए दिल हिला देने वाला सीसीटीवी सामने आया है
— Lavely Bakshi (@lavelybakshi) August 18, 2024
अचानक हुआ एक हादसा,गली मे खड़े दो लड़के बाते कर रहे थे, तभी तीसरी मंजिल से एक AC उपर से एक लडके के उप्पर गिर पड़ा , जिसमे 19 साल के लड़के की मौत हो गई, घटना करोल बाग़ इलाके की है जिसका CCTV सामने आया है @DelhiPolice pic.twitter.com/vXL0ungIkq
அதற்கு அடுத்த சில வினாடிகளில் பிரான்ஷு நகர்ந்ததும், ஏசி ஒன்று 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தது. இதில், ஜித்தேஷ் தலை மீது அது விழுந்து தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார். பிரான்ஷுவும் காயமடைந்து உள்ளார். இதன்பின் உடன் இருந்தவர்கள் பிரான்ஷுவை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

இந்த விபத்து ஆகஸ்ட் 17-ம் தேதி மாலை 7 மணியளவில் நடந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
