சொகுசு வாகனம் மலைப்பள்ளத்தில் கவிழ்ந்து 7 பேர் துடிதுடித்து பரிதாபப் பலி... முதல்வர் இரங்கல்!

 
himachal himachal

ஹிமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள மஸ்ரூண்ட்-ஹாமல் சாலையில் இன்று காலை  பயங்கரச் சாலை விபத்து நேர்ந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள சத்ரண்ட் என்ற கிராமத்தின் மலைப்பாதையில், பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற சொகுசு வாகனம் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்து  பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

கட்டுப்பாட்டை இழந்த அந்தச் சொகுசு வாகனம், மலைப்பாதையின் ஓரத்தில் இருந்த ஆழமான பள்ளத்திற்குள்  தலைக்குப்புறக் கவிழ்ந்து உருண்டது. இந்த கோர விபத்தின் தாக்கத்தில் வாகனத்தின் பாகங்கள் அனைத்தும் முற்றிலும் நசுங்கி நொறுங்கியதால், உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் அலறி கத்தி கூச்சலிட்டனர்.  விபத்தின் கோரப் பிடியில் சிக்கிய மொத்தம் 7 பேர், பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள், இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த சம்பா மாவட்ட காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மலைப்பாதையில் சொகுசு வாகனம் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 7 பேர் பலியான இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பயணிகளிடையே கடுமையான அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.