சாதனை! வந்து விட்டது விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி !

 
சாதனை! வந்து விட்டது விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி !


உலகம் முழுவதும் பரவி வரும் அசாதாரண சூழ்நிலையில் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன . உலகம் முழுவதுமே இன்னும் பல கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாமல் இருக்கின்றனர்.சமீபத்தில் மனிதர்களை போல விலங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதனை! வந்து விட்டது விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி !

செல்லப்பிராணிகளான நாய், பூனைகளுக்கும் வனவிலங்குகளான சிங்கம், புலி போன்றவற்றிற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மனிதர்களை போலவே விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டிருந்தது.

இதன் அடிப்படையில் விலங்குகளுக்கு கொரோனாவிலிருந்து 100 சதவிகிதம் பாதிகாக்கும் கார்னிவக்-கொவாக் என்ற தடுப்பூசியை ரஷியா வெற்றிகரமாக கண்டறிந்துள்ளது.

சாதனை! வந்து விட்டது விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி !

இந்த தடுப்பூசி முதல் முறையாக ரஷிய ராணுவத்தில் இடம்பெற்றுள்ள செல்லப்பிராணி நாய்க்கு முதல் டோஸ் செலுத்தப் பட்டுள்ளது. உலகிலேயே விலங்குகளுக்கு என்று தனியே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற சாதனையை ரஷியா நிகழ்த்தியுள்ளது.மேலும் இது குறித்து ரஷிய மருத்துவ விஞ்ஞானிகள் விடுத்த செய்திக்குறிப்பில் விலங்குகளிடமிருந்து கொரோனா மனிதர்களுக்கு பரவுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web