ஜியோ ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடி மாற்றம்... பயனர்களே நோட் பண்ணிக்கோங்க!

 
ஜியோ
 


 

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று ஜியோ. சமீபத்தில்  ஜியோ மற்றும் ஏர்டெல்  நிறுவனங்கள்  ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியதில் வாடிக்கையாளர்கள் பலர் கடும் அதிருப்திக்கு ஆளாகினர். அதே சமயத்தில் இன்று இணையதளமும், மொபைலும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டன. ரேஷன் கார்டுகள் முதல் வங்கிக் கணக்குகள் வரை   அனைத்தும் ஆன்லைன் பரிவர்த்தனையாகி விட்டன.

ஜியோ ஏர்டெல்

இந்நிலையில் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு ஜியோ நிறுவனம் புதிய திட்டங்களை அறிமுகம் செய்தும் பழைய திட்டங்களை மாற்றி அமைத்தும் வருகிறது.அதன்படி ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டங்களின் விலை சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஜியோ ரூ 349 திட்டத்தில் சிறுசிறு  மாற்றங்களை செய்து வருகிறது.
ஜியோ

முன்னதாக இத்திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக இருந்த நிலையில் தற்போது 30 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு வழங்கும் 1.5 ஜிபி டேட்டாவை 2ஜிபி ஆக அதிகரித்துள்ளது. பயணங்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னதாக இத்திட்டத்தின் விலை ரூ299  ஆக இருந்தது  குறிப்பிடத்தக்கது.

From around the web