காதல் பட நடிகர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு... பெரும் பரபரப்பு!

அந்த புகாரில் எனக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளனர் என்றும் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் பட நடிகர் சுகுமாரனுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்த நிலையில், பின்னர் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியிருந்தார். அவருடன் நெருங்கிப் பழகி வந்த நிலையில், சுகுமார் தனக்கு திருமணம் நடந்ததை மறைத்து என்னிடம் நகை, பணம் வாங்கி ஏமாற்றி விட்டார். அத்துடன் சுகுமார் தனக்கு திருமணம் ஆகி விட்டதால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என மிரட்டல் விடுத்ததுடன் தன்னிடம் வாங்கிய பணம் நகையை கேட்டபோது தரமுடியாது என கொலை மிரட்டல் விடுப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில் வடபழனி போலீசார் காதல் பட நடிகர் சுகுமாரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட துணை நடிகை ஜனவரி மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த புகார் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நடிகர் சுகுமார் காவல் நிலையத்தில் ஆஜராகி துணை நடிகையிடம் வாங்கி பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறி காசோலையை கொடுத்தாக தெரிகிறது. இந்நிலையில் காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் துணை நடிகை மீண்டும் நடிகர் சுகுமாரிடம் பணம் குறித்து கேட்ட போது அவர் முறையாக பதில் அளிக்காமல் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து மாம்பலம் போலீஸார் துணை நடிகை புகாரில் காதல் பட நடிகர் சுகுமார் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்ணை அவமதித்தல், நம்பிக்கை மோசடி உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!